×

பொங்கல் விளையாட்டுவிழா

வேதாரண்யம், ஜன.21: வேதாரண்யம் வள்ளலார் தர்மசாலைமற்றும் கரியாப்பட்டினம் சமூகநலம் சுற்றுச்சூழல் இயக்கம் சார்பில் கட்சுவான் முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் பொங்கல் விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்றத்தின் பொதுச்செயலாளர் முருகு.அருணன் தேசியகொடிஏற்றிவிளையாட்டுபோட்டியை துவக்கிவைத்தார். வள்ளலார் தர்மசாலை நிர்வாகி தமிழ்தூதன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சித்தமருத்துவ பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் மணிவாசகம், சமூகஆர்வலர்கள் தேவிபாலசுப்பிரமணியன், கனகசபாபதி, ராமநாதன், நாகராஜன்,மனோக்குமார் வள்ளலார் குடில் மாரியப்பன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப்பந்ததயம், இசை நாற்காலி, ஓவியம் வரைதல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறுபோட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றமாணவ-மாணவிகளுக்குஅரிமாசெல்வராஜ் பரிசுகளைவழங்கினார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளுவர் திருமன்றத்தின் பொதுச்செயலாளர் முருகு.அருணன் திருக்குறள் புத்தகம் பரிசாகவழங்கினார். முடிவில் கனகசபாபதிநன்றி கூறினார்.

Tags :
× RELATED மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மேதா...