×

நரிக்குடி அருகே உலக்குடியில் உலர்களம் சேதம் தானியங்களை பிரித்தெடுக்க விவசாயிகள் அவதி

திருச்சுழி, ஜன. 20: நரிக்குடி அருகே, தானியங்களை பிரித்தெடுக்கும் உலர்களம் சேதமடைந்திருப்பதால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.நரிக்குடி அருகே, உலக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு, நெல் உள்ளிட்ட தானியங்களை பிரித்தெடுக்க சிமெண்டால் ஆன உலர்களம் அமைக்கப்பட்டது. இக்களத்தில் நெல், எள் உள்ளிட்ட தானியங்களை பிரித்தெடுத்து உலர்த்தி வந்தனர். வயலில் நெற்பயிரை கைகளால் அறுவடை செய்து, உலர்களத்திற்கு கொண்டு வந்து, நெல்லை பிரித்தெடுத்து வந்தனர். தற்போது, அறுவடைக்கு பெரும்பாலும் இயந்திரம் பயன்படுத்தப்படுவதால், நெல்லை உலர்த்த மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல எள் செடிகளை காயவைத்து எள்ளை தனியாக பிரித்தெடுத்து வந்தனர்.இவ்வாறு பயன்பட்டு வந்த உலர்களம் தற்போது கற்கள் பெயர்ந்து களம் முழுவதும் மண்மேவிய நிலையில் உள்ளது.

Tags : Nerikkudi Dryer ,Dryer Damage Farmers ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு