×

வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உழவு செய்த டிராக்டர் பறிமுதல்

கொள்ளிடம், ஜன.20: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாகுபடி செய்து வரும் நிலத்தில் வாடகைக்கு நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உழவு செய்து கொண்டிருந்தார். இதனைக்கண்டித்து கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து நேற்று வனக்காவலர்கள், துளசிமாலை, மதிவாணன், ஆசைத்தம்பி, காளிமுத்து, முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் உழுவதற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

Tags : forest ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...