×

தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவிப்பு நுணாக்காடு ஊராட்சியில் பகுதிநேர ரேஷன் கடை திறக்க மக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச.16: நுணாக்காடு ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த நுணாக்காடு ஊராட்சியில் திருப்பாலி, தென்காசி, விஸ்வகொத்தமங்களம், விஸ்வநாதபுரம், ஆட்டூர், பண்டாரஒடை, நாமஞ்சேரி, கள்ளியடி என ஏழு கிராமங்கள் உள்ளடக்கிய பகுதி இதற்கு ஆட்டூரில் இயங்கும் ரேஷன் கடையில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டிய நிலைமை உள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஊராட்சியில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது.இதனால் காலவிரயம் ஏற்படுவதுடன், கூலி வேலைக்கு செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே விஸ்வ கொத்தமங்கலத்தில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் வாரத்தில் இரண்டு நாள் இயங்கும் பகுதி நேர ரேஷன் கடைதிறக்க பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...