×

நாளை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, டிச. 16: சிவகங்கையில் நாளை(டிச.17) மத்திய பாஜ அரசு மற்றும் அதற்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. திமுக சிவகங்கை மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பண் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்தியில் பதவியேற்ற நாள் முதல் பாஜ அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பாஜ அரசு நினைப்பதையே சட்டமாக்கி வருகிறது. இதற்கு அதிமுக அரசும் துணை போகிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கும் அதிமுக அரசு துணை போனது. இது இலங்கை தமிழ் மக்களை, தமிழக மக்களை, சிறுபான்மையினரை மிகவும் பாதிக்கும் செயல் ஆகும். இத்தகைய மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜ அரசையும் துணை போகும் அதிமுக அரசையும் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.




Tags : Demonstration ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி