×

மாவட்ட இறகுபந்து பழநி அக்சயா பள்ளி வெற்றி

பழநி, டிச. 13: மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் பழநி அக்சயா பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பழநி அக்சயா அகாடமி பள்ளி வளாகத்தில் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.  அக்சயா அகாடமி பள்ளி தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். செயலர் பட்டாபிராமன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் காயத்ரி வரவேற்று பேசினார். பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில் பழநி அக்சயா பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஹர்ஷிதா, குணவர்த்தினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பழநி டிஎஸ்பி விவேகானந்தன் பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்