×

தலித் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும்

நாகை, டிச.13: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி தலித் மக்களின் வாழ்வாதார கூட்டியக்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வாதார கூட்டியக்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகை, கீழையூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய தாலுகாக்களை சுற்றியுள்ள கிராமங்களில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் முழு மற்றும் பகுதி அளவில் வீடுகள் சேதம் அடைந்தது. இதில் வீடுகளை இழந்தவர்களுக்கு பேரிடரால் பாதிக்கப்படாத பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும். பேரிடர் காலங்களில் நிவாரண முகாம்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே பேரிடர் பாதுகாப்பு மையத்தை கட்டித்தரவேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரவேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த கிராமப்புற கூலி தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பிற்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : concrete houses ,
× RELATED குடிசை வீடுகளை கான்கிரீட்...