×

தி.கோடு மலையில் சொக்கப்பனை

திருச்செங்கோடு, டிச.12: திருச்செங்கோட்டில், கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று அர்த்தநாரீஸ்வரர் மலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர்,  ஆதிகேசவப்பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக சொக்கப்பனை கொளுத்தும்  இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு எரியூட்டப்பட்டது. சொக்கப்பனை கொழுந்து விட்டு எரிவதை நகர மக்கள் பார்த்து வணங்கினர். திருவண்ணாமலை தீபத்திருநாளுக்கு அடுத்த நாள், திருச்செங்கோட்டில் தீபத்திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் குருசாமி, பொன்.சரஸ்வதி எம்எல்ஏ மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : hill ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!