கிருஷ்ணகிரி, டிச.12: வேப்பனஹள்ளி எஸ்ஐக்கள் ராஜா, சுரேஷ்குமார் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பனஹள்ளி பகுதியில், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 12 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, வேப்பனஹள்ளியை சேர்ந்த பிரபு (23), விஜய் (21), ரகமதுல்லா (24), கணேசன் (32), முருகேசன் (29), நாகமணி(30), ஆனந்தன்(30), டேவிட்(22), சிவக்குமார்(29), நவீன்குமார் (26), நாத்(28), சந்தோஷ்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர்.