×

108 வராததால் சாலை மறியல்

தேவதானப்பட்டி, டிச 12: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி சொசைட்டி காலனியைச் சேர்ந்தவர் தவுட்டுராஜா(35). இவர் டூவீலரில் சில்வார்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு சென்றார். தேவதானப்பட்டிக்கு அடுத்த சாத்தாகோவில்பட்டி பிரிவில் வத்தலக்குண்டில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ டூவீலர் மீது மோதியது. இதில் தவுட்டுராஜாவுக்கு படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.விபத்து நடந்து ஒரு மணிநேரம் ஆகியும் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் காயமடைந்தவரை போலீசார் ஆட்டோவில் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் பெரியகுளம் வத்தலக்குண்டு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : road ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை