காரைக்குடி, டிச. 12: அழகப்பா பல்கலைக்கழக பழனியப்பா செட்டியார் நினைவரங்கத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான இலவச மாதிரி நேர்முகத் தேர்வு வரும் 23 முதல் 31 வரை நடத்தப்பட உள்ளது. சிறந்த வல்லுநர்களை கொண்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான மாதிரி நேர்முகத் தேர்வு வரும் 15ம் தேதி நடத்தப்பட உள்ளது. குருப் 1 முதன்மை தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்விற்காக தயாராகி கொண்டிருக்கும் விண்ணப்பத்தாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் தன்னார்வு பயிலும் வட்டத்திற்கு நேரில் சென்று பெயரை பதிவு செய்து கொள்ளலாம். 99449 00290 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.