×

சனி, ஞாயிறு மனுத்தாக்கல் இல்லை

சிவகங்கை, டிச. 12: உள்ளாட்சி தேர்தலுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாதுஎன அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கான, வேட்புமனுக்கள் 09.12.2019 முதல் 16.12.2019வரை தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற அனைத்து வேலை நாட்களிலும் வேட்புமனுக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருகின்ற சனி (டிச.14) மற்றும் ஞாயிறு (டிச.15) அரசு பொது விடுமுறை நாட்கள் என்பதால் இந்த இரு நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு