×

வீட்டு வரி கட்டுவதில் சிக்கல் கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

சிவகாசி, டிச. 12: சிவகாசி அருகே, கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே, நாரணாபுரம் பகுதியில் சிவகாசி கிழக்கு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பாலமுருகன் (எ) தீப்பிடிச்சான் (50), வீரபாண்டி ரைஸ் மில்லை சேர்ந்த காளிமுத்து மகன் விக்னேஷ்வரன் (34) ஆகியோர் என்பதும்,  இருவரும் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு