×

ம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகள் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்

திருச்சுழி, டிச. 12: ம.ரெட்டியபட்டி வட்டாரத்தில் நடப்பு  ராபி பருவத்தில் பயிர்க்காப்பீடு செய்ய, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் துரைக்கண்ணம்மாள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: 2019-20ம் ஆண்டுக்கான ராபி பருவத்தில், பயிர் காப்பீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண்  பயிர்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, பாசிப்பயறு, உளுந்து, துவரை மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய டிச.20, நிலக்கடலை, சூரியகாந்தி பயிருக்கு 2020 ஜன.1, எள் பயிருக்கு 2020 பிப்.15, கரும்புக்கு 2020 அக்.30 கடைசி நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், மக்காச்சோளத்திற்கு  பயிர் காப்பீட்டு கட்டணம்  ஏக்கருக்கு ரூ.356, சோளத்துக்கு ரூ.164, கம்புக்கு ரூ.150,  ராகி பயிருக்கு ரூ.140, பாசிப்பயிர், உளுந்து, துவரை ஏக்கருக்கு ரூ.128, பருத்திக்கு ரூ.1135, சூரியகாந்திக்கு ரூ.1866 என பயிர் காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டு திட்டம் ‘அக்ரி கல்ச்சுரல் இன்சுரன்ஸ கம்பெனி லிமிடெட்’ ஆகிய நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. வங்கியில் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயம் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பொதுசேவை  மையம்  மற்றும் தேசிய வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு  விண்ணப்பம், பட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றை இணைத்து பதிவு செய்து, அதற்கான ரசீது பெற்றுக் கொள்ளலாம்’ தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை