×

பழநியில் கந்தவிலாஸ் இல்ல வரவேற்பு விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

பழநி, டிச. 11: பழநியில் நடந்த கந்தவிலாஸ் விபூதி நிறுவன இல்ல வரவேற்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பழநி கந்தவிலாஸ் விபூதி நிறுவன குழுமத்தின் கீழ் வடக்கு கிரிவீதியில் சுபம் ஹோட்டல், கிழக்கு கிரிவீதியில் டிவைன் போர்ட் ஹோட்டல் போன்ற செயல்பட்டு வருகின்றன. கந்தவிலாஸ் விபூதி நிறுவன உரிமையாளர் செல்வக்குமார்-பிரேமா தம்பதியினரின் மகன் நவீன்விஷ்னுவிற்கும், சேலம் ஆல்பா பாலிமர்ஸ் உரிமையாளர் நித்தியானந்தன்-தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகள் ராஜசேனாவிற்கும் கடந்த டிச.6ம் தேதி சேலத்தில் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பழநியில் உள்ள ஹோட்டல் டிவைன் போர்ட் வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஹோட்டல் வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக பிரத்யேக மேடை, மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் குருமகா சன்னிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மணமக்களை நேரில் சந்தித்து மலர் தூவி ஆசிர்வாதம் செய்தார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், பழநி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, அன்பழகன், மாவட்ட ஆவின் தலைவர் செல்லச்சாமி, கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, செந்தில்குமார், ஜெயம் லாட்ஜ் உரிமயாளர் ஜே.பி.சரவணன், டிஎஸ்பி விவேகானந்தன், பழநி பாலாஜி கருத்தரித்தல் மையம் டாக்டர் செந்தாமரைச்செல்வி, வேல் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் கார்த்திக், சஞ்சய் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் நடராஜ், வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, முருகானந்தம், வர்த்தக சங்க நிர்வாகிகள் தண்டபாணி, மதனம் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Tags : Kandavillas Home Reception Ceremony ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்