நாமக்கல், டிச.11: நாமக்கல், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை ஏடிஎஸ்பி ரவிசங்கர் கவனித்து வருகிறார். அவர் நேற்று காலை நாமக்கல் காவல் நிலையம் வந்து இன்ஸ்பெக்டர் செல்வராஜூடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாமக்கல் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஊராட்சி மன்றங்கள், அங்குள்ள குக்கிராமங்கள், குறித்து கேட்டறிந்தார். பதட்டமான வாக்குசாவடிகள் அங்கு தேர்தலின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்ஸ்பெக்டருக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து, நாமக்கல் பிடிஓ அலுவலகம் சென்ற ஏடிஎஸ்பி ரவிசங்கர், பிடிஓ தேன்மொழி மற்றும் தேர்தல் அலுவலர்களிடம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடிகள் எண்ணிக்கை, வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.