×

எருமப்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி பலி

சேந்தமங்கலம், டிச.11:  நாமக்கல் அடுத்த எருமப்பட்டி பழனி நகரை சேர்ந்தவர் முகமதுசாதிக்(60). கூலி தொழிலாளியான இவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கைகாட்டி என்ற இடத்திற்கு சென்றார். எம்ஜிஆர் சிலை அருகில் சென்றபோது, அவ்வழியாக வந்த மினி வேன், முகமது சாதிக்கின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.  இதில் தூக்கி வீசப்பட்ட முகமதுசாதிக், எருமப்பட்டி வழியாக பவித்திரம் நோக்கி சென்ற தனியார் கல்லூரி வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எருமப்பட்டி போலீசார், முகமது சாதிக்கின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : crash ,Erumpatti ,
× RELATED இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக நிர்வாகி பலி..!!