×

உள்ளாட்சி தேர்தல் தூத்துக்குடியில் 2ம் நாளில் 63 பேர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி:  ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் நாளான நேற்று 63 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன் தினம் துவங்கியது. முதல் நாளில் 113 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். 2ம் நாளான நேற்று  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 20 பேர், , ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 40 பேர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 3 பேர்  என மொத்தம் 63 பேர் வேட்பு மனுக்களை  தாக்கல் செய்துள்ளனார். கடந்த இருநாட்களில் மொத்தமாக அனைத்து கிராம உள்ளாட்சி பதவிகளுக்கும் 176 பேர்வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்  பதவிக்கு இதுவரையில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : election ,Thoothukudi ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...