×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு சீர்காழி அரசு மருத்துவமனையி்ல் புதிய கட்டிடம் திறப்பு விழா

சீர்காழி, டிச.10: சீர்காழியில் குட்சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார் சீர்காழி அரசு மருத்துவமனையில் குட்சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பில் ஓய்வு பெற்ற தாசில்தார் செல்லையா நினைவாக ரூ.15 லட்சம் செலவில் ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் தேவதா தலைமை வகித்தார். சீர்காழி எம்எல்ஏ பாரதி, டாக்டர் முத்துக்குமார் குட் சமாரிடன் கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் பிரவீன், அலெக்ஸ் முன்னிலை வைத்தனர். குட் சமாரிடன் அறக்கட்டளை நிர்வாகி ராதாகிருஷ்ணன், விவேகானந்தா கல்வி அறக்கட்டளை நிர்வாகி அனிதா ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் ஓ எஸ்.மணியன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். இதில் டாக்டர்கள் பானுமதி, அறிவழகன், மருதவாணன், முன்னாள் எம்எல்ஏக்கள் பூராசாமி, ரெங்கநாதன், மூர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜமாணிக்கம், போகர் ரவி மாமல்லன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி, துணைத்தலைவர் ஏவி மணி, ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன், கூட்டுறவு ஆசிரியர் சங்க தலைவர் கோவி நடராஜன், சீர்காழி நிலவள வங்கி தலைவர் நற்குணன், உதயன், பரணி, கார்திக் பொறியாளர் ராமையன். கலைவாணன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தஞ்சை மருத்துவ கல்லூரி மருந்துக் கிடங்கு அலுவலர் முரளி நன்றி கூறினார்.

Tags : Opening Ceremony ,Public Building of the Public Expectation Department ,Government Hospital ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...