×

பொங்கல் விழா கலை இலக்கிய போட்டி

கூடலூர், டிச. 4: நீலகிரி மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் 19ம் ஆண்டு பொங்கல் விழாவை ஒட்டி பள்ளி மாணவ மாணவியர் இடையே  கலை இலக்கிய போட்டி கலைவாணி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. 1 முதல் 12ம் வகுப்பு வரை ஓவியம், பாட்டு, கட்டுரை, பேச்சு, நடிப்பு, நடனம், பொது அறிவு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு, நீலகிரி மாவட்ட தமிழ் சங்க தலைவர் மணிவண்னன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்தராஜா வரவேற்றார்.  கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் போட்டிகளை துவக்கி வைத்தார்.

கூடலூர் கல்வி மாவட்ட அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவ மாணவியர் போட்டிகளில் கலந்து கொண்டனர். செயலாளர் நாகநாதன், துணை செயலாளர் கலைச்செல்வன், பொருளாளர் மணிகண்டன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்,  ஞானப்பிரகாசம், ஸ்ரீகாந்த் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன் நன்றி கூறினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்க பொங்கல் விழா நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட உள்ளது.

Tags : Pongal Festival Art Literary Competition ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு