×

டெங்கு முன் தடுப்பு பணி

பொன்னமராவதி, நவ.22: பொன்னமராவதி அருகே சுகாதாரதுறை சார்பில் உசிலம்பட்டி ஊராட்சியில் டெங்கு முன்தடுப்பு பணிகள் நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உசிலம்பட்டி ஊராட்சியில் டெங்கு முன்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் டெங்குமுன் தடுப்பு களப்பணியாளர்கள் வரதராஜன் மற்றும் ரேவதி மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் ஈஸ்வரி, தனலெட்சுமி குழுவினர் பணியினை மேற்கொண்டனர். இதில் கொசு மருந்து அடிக்கப்பட்டது தூய்மை பனி மேற்கொள்ளப்பட்டது. வீடுகள் தோறும் டெங்கு விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது. இந்த பணிகளை கிராம ஊராட்சி ஆணையர் சுவாமிநாதன், மண்டல துணைஆணையர் சேகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ