×

சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பங்கள் சரி செய்ய கோரிக்கை

மணமேல்குடி, நவ.22: மணமேல்குடி ஜெகதீஸ்வரர்கோயில் சாலையில் உள்ள மின் கம்பங்கள் அனைத்தும் சாய்ந்துவிழும் நிலையில் உள்ளதால் மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் நட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஜெகதீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்றஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு சாமிகும்பிடவும், அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்க்கும் தினசரி 300க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மேலும் கோவில் பின்பக்கம் உள்ள பல ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாய பணிகள் நடந்து வருவதாலும் அதிகாலை முதல் இரவு வரைஆள் நடமாட்டம் இருக்கும் பரபரபபான சாலையாகும். மேலும் அந்த சாலையை ஒட்டி ஏராளமான வீடுகளும் உள்ளன.இந்நிலையில் சாலையின் தெற்கு பக்கம் உள்ள வயல்களில் அமைக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகளும் தாழ்வாக செல்கின்றன. எனவே பெரும் சேதம் ஏற்படும் முன் மின்கம்பங்கள் மாற்ற வேண்டும் அல்லது சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags :
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா