×

தண்ணீர் உறிஞ்சிய 6 மின்மோட்டார் பறிமுதல்

புதுக்கோட்டை, நவ.22: புதுக்கோட்டை நகரில் காவிரி குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சிய 6 மின்மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் காவிரி குடிநீர் குழாய்களின் மின்மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உத்தரவின்படி, நகராட்சி அலுவலர்கள் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என சோதனை செய்தனர். அப்போது காவிரி குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சிய 6 மின்மோட்டார்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா