சேந்தமங்கலம், நவ.22: சேந்தமங்கலம் அடுத்துள்ள ஜங்களாபுரத்தில், நேற்று மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 அடி பள்ளம் தோண்டிய போது, உள்ளே 2 மண்ணுளி பாம்புகள் இருப்பதை கண்டனர். இதுகுறித்து நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த நாமக்கல் வனச்சரகர் ரவிச்சந்திரன், வனவர் தமிழ்வேந்தன், வனக்காப்பாளர் பாலசுப்ரமணியன், மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மண்ணுளி பாம்புகளை பிடித்துச்சென்று, கொல்லிமலை காப்புக்காட்டில் விடுவித்தனர்.