×

துணிச்சலான செயல்புரிந்த அரசு ஊழியர்களுக்கு அண்ணா விருது வழங்கல்

நாமக்கல்,  நவ.22: துணிச்சலான செயல்புரிந்த அரசு ஊழியர்கள், அண்ணா விருது பெற  விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிர் காக்கும் துணிச்சலான செயல்  புரிந்த மற்றும் சொத்துக்கள் மீட்டெடுத்தமைக்காக, 2020ம் ஆண்டுக்கான அண்ணா விருது பெற, அரசு  ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விருது பெற, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த  தகுதியான நபர்கள், மாவட்ட சமூகநல அலுவலர், கலெக்டர் அலுவலகம்,  நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Anna ,servants ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்