திருச்செங்கோடு, நவ.22: நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்செங்கோட்டில் வட்டார, நகர காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால் தலைமை வகித்தார். நாமக்கல் நகரில் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் நவீத் தலைமையிலும், மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால் முன்னிலையிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் டாக்டர் ஸ்ரீவெல்லபிரசாத் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று(22ம் தேதி) நடக்கிறது, இதில் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநில பொதுச்செயலாளர் கீழானூர் ராஜேந்திரன், முன்னாள் எம்பி ராணி மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். நாமக்கல் குளக்கரை திடல் அருகில், மாலை சுமார் 3.30 மணி அளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, நகர, வட்டார, பேரூர் பொறுப்பாளர்கள், அணியின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பொன்னுசாமி, லோகநாதன், ராஜலிங்கம், சிவனேசன், கண்ணன், சதீஷ்குமார், மல்லை ராஜா, செல்லவேல், ராமலிங்கம், நல்லூர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.