×

ஆர்.கே.புரம் சாலையில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு

ஊட்டி, நவ.22: ஊட்டி நகரில் இருந்து ஆர்.கே.புரத்திற்கு தாஸ்பிரகாஷ் வழியாக ஒரு சாலை செல்கிறது. இச்சாலை நகராட்சி பராமரிப்பில் உள்ளது. எல்க்ஹில், மஞ்சனக்கொரை, தீட்டுக்கல் மற்றும் ஆர்.கே.புரம் பகுதி மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆர்.கே.புரம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் குடியிருப்பு உள்ளது. அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்கள் மூலம் சாலையில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளது. இதனால், எந்நேரமும் இச்சாலையில் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால் சாலை பழுதடைந்துள்ளது.

மேலும், சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்காமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : RK Puram road ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு