×

ரூ.15.21 லட்சம் கையாடல் ஊழியர் மீது புகார்

கோவை, நவ. 22:கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் ஷூ கடை ஷோரூம் ஏரியா விற்பனை மேலாளராக பணியாற்றி வருபவர் பாலச்சந்திரன். இவர், ராமநாதபுரம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கோவை ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள ஷூ கடை ஷோரூமில் 10.8.15 முதல் 25.6.19 வரை விற்பனையான ஷூக்களின் கணக்கு தணிக்கை நடந்தது. அதில் பள்ளிகளுக்கு ஷூ விற்பனை செய்த பணம் ரூ.15 லட்சத்து 21 ஆயிரம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்த கணபதியை சேர்ந்த நாகதீப் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார், மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நாகதீப்பிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கோவை மேட்டுப்பாளையம் ரோடு...