×

டெம்போ மோதி கல்லூரி மாணவர் பலி

பரமத்திவேலூர், நவ.19: பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் நவீன்குமார்(18). அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் சிவா(18).  இருவரும் நாமக்கல் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, திருச்செங்கோடு கோயிலுக்குச் சென்றுவிட்டு இருவரும் டூவீலரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கபிலர்மலை-ரங்கம்பாளையம் பிரிவு சாலை அருகே வரும் போது, எதிரே வந்த டெம்போ, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நவீன்குமார், தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இருவரையும் மேல்சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சிவா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : student ,Tempo Moti College ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...