×

8 ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், நவ.19: நாமக்கல் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து, மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில், காலியாக உள்ள ஒரு ஜீப் ஓட்டுனர், இரண்டு பதிவுரு எழுத்தர்கள், 9 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 3 இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கு, அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. காலிப்பணியிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட இன சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விபரங்கள், நாமக்கல் மாவட்ட இணையதளம், தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் மற்றும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் தகவல் பலகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட, விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட உரிய சான்றிதழின் நகலுடன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 2ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரால் அனுப்பப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : persons ,Unions ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...