×

விளைநிலத்திற்கு சாலை அமைக்க வேண்டும்

தேவதானப்பட்டி, நவ. 19: தேவதானப்பட்டி அருகே உள்ள தர்மலிங்கபுரத்தில் விளைநிலத்திற்கு செல்ல சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தர்மலிங்கபுரம் வனத்துறையில் இருந்து வடக்கு நோக்கி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், கால்நடைகளை ஓட்டிச் செல்லவும், விளைந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டுவரவும் குறுகலான வண்டிப்பாதை உள்ளது. இந்த வண்டிப்பாதையில் மழைபெய்தால் மழைநீர் பாதையில் வழியாக வருவதால் பாதையில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த வண்டிப்பாதையில் சாலை அமைக்கவேண்டும் என இந்த பகுதியில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,farm ,
× RELATED பேரூர் – சிறுவாணி மெயின் ரோட்டில் பழமையான ஆலமரம் அகற்றும் பணி துவக்கம்