×

பிளாஸ்டிக் பாட்டில் பறிமுதல் ரூ.70 ஆயிரம் அபராதம்

ஊட்டி, நவ. 12: நீலகிரி மாவட்டத்தில் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.70 ஆயிரத்து 450 அபராதம் விதிக்கப்பட்டது.  ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது, ெபாது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது, மாநில மற்றும் ேதசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை ெசய்வதை தவிர்ப்பது தொடர்பாக விழிப்புணர்ைவ ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் அறிவுரைப்படி ஓட்டுமொத்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக துைண ஆட்சியர் நிைலயிலான அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்ெகாண்டனர். இந்த ஆய்வின் போது 34 தடை செய்யப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், 18 கிேலா பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.70 ஆயிரத்து 450 அபராதம் வசூலிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்–்க்க வேண்டும். அதேபோல் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களை பயன்படுத்திட வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ