×

தப்பி ஓடிய தம்பதிக்கு வலை 93 நாட்களுக்கு தண்ணீர் வரும் மூணாறு அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

மூணாறு, அக்.16: மூணாறு அருகே கன்னதடி சந்தன்பாறை பகுதியை சேர்ந்தவர் அனிஷ்(30). இவர் கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, இந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. இந்நிலையில் சிறுமி 7 மாதம் கர்ப்பிணியான பிறகு இந்த சம்பவம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியிடம் மருத்துவர்கள் தலைமையில் சைல்டு லைன் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து சைல்டு லைன் அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக சந்தன்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அனிஷை கைது செய்து நெடுங்கண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தனர்.  



Tags :
× RELATED கண்டமனூர் அருகே சூறாவளி காற்றுடன் திடீர் மழை: வீட்டின் மேற்கூரை பறந்தது