×

அமைப்புசாரா நல வாரியங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஊட்டி, அக். 16: அமைப்பு சாரா நல வாரியங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 17ம் தேதி குன்னூர் ஓட்டுப்பட்டரையில் நடக்கிறது. தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் கூறியிருப்பதாவது: கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர், அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், கைவிைன ெதாழிலாளர், காலணி தயாரிக்கும் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டு பணியாளர், பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென 17 நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு மற்றும் பயனாளிகளுக்கு நல வாரிய அட்டை வழங்கும் முகாம் வரும் 17ம் தேதி குன்னூர் ஓட்டுப்பட்டரை மவுண்ட் பிளசன்ட் மோர்ஸ் கார்டனில் காலை 10 மணி முதல் நடக்கிறது. நலவாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு கோரும் விண்ணப்பத்தை உரிய படிவத்தில் இம்முகாமில் நேரில் அளித்து வாரியத்தில் பதிவு செய்து வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். இதற்கு பதிவு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றொப்பமிட்ட ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வயது குறித்த சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தொழில் பற்றிய சான்றினை உரிய நபர், அலுவலரிடம் விண்ணப்பத்தில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அரசின் பிற துறையின் கீழ் உள்ள வாரியங்கள், திட்டங்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் பதிவு செய்ய இயலாது. இவ்வாறு லெனின் கூறியுள்ளார்.

Tags : New Membership Admission Camp ,
× RELATED திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்