×

சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தல்

வால்பாறை, அக். 16: வால்பாறை அருகே ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வால்பாறை அருகே உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட், ஆத்துமட்டம் குடியிருப்பு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் இருளாண்டி என்பவரது மாட்டை சிறுத்தை வேடையாடி கொன்றது.

அதேபோல் கடந்த 30 நாளில் 5க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை வேட்டையாடியுள்ளது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.எனவே வனத்துறையினர் ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் உலா வரும் சிறுத்தையை உடனடியாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ