×

மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பண்ருட்டி, அக். 16: பண்ருட்டி அருகே அக்கடவல்லி மற்றும் எனதிரிமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் எடுப்பதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. அப்போது போலீசாரை பார்த்தவுடன் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அங்கிருந்த 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வெளிநாட்டில் வேலை பார்த்தவரிடம் ₹2.50 கோடி மோசடி