×

மாணவர்களுக்கு பாராட்டு

காரைக்குடி, அக்.15:  காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார். பள்ளி தாளாளர் சேதுராமன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், குழந்தைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள் எப்போதும் பாராட்டி பரிசு தர வேண்டும். பாராட்டப்படும் குழந்தைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகின்றனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டும் போது அவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும். பெற்றோர்களின் பாசமாக பாராட்டு, ஆசிரியர்களின் நேசமான பாராட்டு மாணவர்களுக்கு வேண்டும். அப்போது தான் அவர்கள் மேலும் புதிய சாதனைகளை புரிவார்கள். நமது பள்ளியை பொறுத்தவரை என்றுமே மாணவர்களை பாராட்ட தவறியது இல்லை. அதுபோல மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களையும் தொடர்ந்து பாராட்டி வருகிறோம் என்றார். நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் அஜய்யுக்தேஷ், நிர்வாகிகள் ரஜினிரத்னமாலா, ஐஸ்வர்யாயுக்தேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு