×

கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கபடிப் போட்டி திருப்புத்தூர் கல்லூரி முதலிடம்

திருப்புத்தூர், செப் 19: திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் கபடிப் போட்டி நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் கபடிப் போட்டியினை ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரிச் செயலர் ஆறுமுகராஜன் துவக்கி வைத்தார். பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளான காரைக்குடி, ராமநாதபுரம், சருகணி, கீழக்கரை, தெக்கூர், பரமக்குடி, சிவகங்கை, கமுதி, திருப்புவனம் உள்ளிட்ட 24 கல்லூரி கபடிக் குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டிக்கு ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியும், அழகப்பா கலைக் கல்லூரியும் தேர்வு பெற்றன. இப்போட்டியில் திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வெற்றி பெற்று முதலிடத்தையும், காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரி 2ம் இடத்தையும் பிடித்தது. இவ்விரு அணிகளுக்கும் கோப்பை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம், மற்றும் உடற்ககல்வி அலுவலர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் பங்கேற்ற ஒட்டுமொத்த அணிகளின் சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர்கள் ஜெயவேல், வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Thirupputhur College ,men ,kabaddi competition ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்