×

மின்னல் தாக்கி குடிசை வீடு எரிந்தது

ஆத்தூர், செப்.19: ஆத்தூர் பகுதியில் கடந்த 4 தினங்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, முட்டல் கிராமத்தில் பலத்த மின்னலுடன் மழை பெய்தது. இதில் அல்லிமுத்து என்பவரது குடிசை வீட்டின் மேல் மின்னல் தாக்கியது. இதில் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தகவலறிந்த ஆத்தூர் எம்எல்ஏ சின்னத்தம்பி, மின்னல் தாக்கி தீயில் எரிந்த வீட்டை பார்வையிட்டு அல்லிமுத்துவிற்கு ஆறுதல் கூறினார். பின்னர், நிவாரண தொகை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, பகுதி அதிமுக செயலாளர் செந்தில்குமார், மணிகண்டன், அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : cottage ,
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...