×

நாய் கடித்து மான் பலி

காரியாபட்டி, செப். 17: காரியாபட்டி அருகே, தோப்பூர் கண்மாய் பகுதியில் மான்கள் அதிகமாக உள்ளன.
இப்பகுதியில் இருந்து தோப்பூருக்குள் ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. இதைக் கண்ட தெருநாய்கள் அதனை துரத்தி கடித்தன. இதில் மான் காயமடைந்தது. கிராம மக்கள் நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டு, விஏஓ மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் வத்திராயிருப்பு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில், வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வனக்காப்பாளர் ஜெயச்சந்திரன், வேட்டைத்தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த மானை மீட்டு, புதுப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த உதவி மருத்துவர் ரமேஷ் கணேசன் சிகிச்சை அளித்தார். ஆனால், மான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை