×

தடை புகையிலை விற்றவர் கைது

சாத்தூர், செப். 17: சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில்,
 பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை,
விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற, அதே
ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு