×

படிக்கட்டில் பயணம் செய்த வாலிபரை கண்டித்த கண்டக்டர் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி, செப்.15: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் வேல் மகன் லட்சுமணன்(29). இவர், தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக முன் மாலை ராயக்கோட்டை பஸ் நிலையத்தில், ராயக்கோட்டையை சேர்ந்த ஜெகதீஷ் மகன் கோகுல்(25) என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் படிக்கட்டிலேயே நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த கண்டக்டர் லட்சுமணன், கோகுலை பஸ்சின் உள்ளே வரச்சொல்லியுள்ளார். இதில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோகுல், கண்டக்டர் லட்சுமணனை கடுமையாக தாக்கினார்.

இதில், பலத்த காயமடைந்த லட்சுமணன் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ராயக்கோட்டை போலீசார், கோகுல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் ஆயுதங்களுடன் கைது