×

மாநில அளவிலான கபடி போட்டி

திருவில்லிபுத்தூர், செப்.5: திருவில்லிபுத்தூர் அருகே, செங்குளத்தில் அனைத்து சமுதாய நல்லுறவை மேம்படுத்த, மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, கன்னியாகுமரி, பரமக்குடி, விழுப்புரம், மத்திய சென்னை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 80க்கும்  மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு  திருவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ சந்திரபிரபா முத்தையா  சார்பில், அதிமுக நகர பொருளாளர் கருமாரி முருகன் ரொக்க பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.முதல் பரிசாக ரூ.12 ஆயிரம், 6 அடி   கோப்பையை திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கபடி குழுவும், இரண்டாம் பரிசாக ரூ.8 ஆயிரம், 5 அடி கோப்பையை லட்சுமியாபுரம் மனதில் கபடி குழுவும், மூன்றாம் பரிசாக ரூ.6 ஆயிரம், 4 அடி கோப்பையை திருவில்லிபுத்தூர் கருப்பு நிலா கபடி குழுவும் வென்றன. போட்டியில் பங்கேற்ற  அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED வத்திராயிருப்பு அருகே ட்ரோனில்...