×

திட்டக்குடி அருகே அழுகிய முட்டைகள் புகார் பள்ளியில் தாசில்தார் ஆய்வு

திட்டக்குடி, ஆக. 22: திட்டக்குடியை அடுத்துள்ள மேல்ஆதனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 76 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவின் போது வழங்குவதற்காக பெறப்பட்டிருந்த முட்டைகள் அழுகி இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி, அப்பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். விசாரணையில், பள்ளியில் இருந்த முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தது தெரிந்தது. இவ்வாறு பெறப்பட்ட அழுகிய முட்டைகள் உணவுக்கு பயன்படுத்தாமல் தவிர்க்கப்பட்டது. எந்த சூழ்நிலையிலும் தரமான முட்டைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய அழுகிய முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது எனவும் தாசில்தார் புகேழந்தி அறிவுறுத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் ராதாபாய், வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED மரக்காணம் அருகே பட்டாசு...