×

ரயில் மறியல் செய்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது

ஆவடி, ஆக.11: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநில சுயாட்சிக்கு எதிரான சட்ட திருத்தங்களை செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆவடியில் ரயில் மறியல் போராட்டம் மாவட்ட பொறுப்பு குழுத்தலைவர் முகம்மது சலீம் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 3 தொண்டர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவபடத்தை அவமரியாதை செய்து உள்ளனர். அவர்களை, சப் இன்ஸ்பெக்டர் ரஜித்  தடுத்துள்ளார். ஆனால், அவர்கள் ரஞ்சித்தை பணி செய்ய விடாமல், தகாத வார்த்தைகள் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரஜித் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், ஆவடி, ஆனந்த் நகரை சேர்ந்த செய்யதலி (33), பூந்தமல்லி, சக்தி நகரைச் சார்ந்த இதயத்துல்லா (25), பூந்தமல்லி கண்டோன்ெமண்ட் பகுதியை சேர்ந்த முகமதுரபிக் (25) ஆகியோர் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து  மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை பூந்தமல்லி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...