×

ஓட்டுநர் உரிமையாளர் நலச்சங்கம் கோரிக்கை

மஞ்சூர், ஜூலை 24:  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் ஓட்டுநர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் துரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
குந்தா தாலுகாவில் கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகள், குந்தா, பாலகொலா, முள்ளிகூர், இத்தலார் ஊராட்சிகளை உள்ளடக்கி 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான தேயிலை தொழிற்சாலைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், மின் நிலையங்கள் உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு பணியாற்றுகின்றனர். மேலும் குந்தா பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஈரோடு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர். எனவே குந்தா பகுதி பொதுமக்களின்  நலன் கருதி மஞ்சூரில் இருந்து ஈரோட்டிற்கு நேரடியாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED ஊட்டியில் 2 மணி நேரம் மழை கொட்டி...