×

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 2,350 பேர் மீது வழக்கு

ஈரோடு, ஜூலை 24: ஈரோட்டில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2,350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு நகர் பகுதியில் அரசு மருத்துவமனை ரவுண்டானா, கலெக்டர் அலுவலக சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும், அவர்களுக்கு பின்னால் அமர்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலித்துள்ளனர். இந்த மாதம் இதுவரை 750 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 மாதத்தில் 2 ஆயிரத்து 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு