×

திருமயம் அருகே நெய்வாசலில் குலால பூசை படையல் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருமயம். ஜூலை 24: திருமயம் அருகே நடைபெற்ற குலால பூசை படையல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தை சேர்ந்த நாச்சியார் அம்மன் கோவிலின் 6ம் ஆண்டு பூசை படையால் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் திருப்பத்தூர் ஆறுகரை குலாலர்களின் தெய்வமான  நாச்சியார் அம்மன் பூசை படையல் விழாவானது ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதில் ஆறாம் ஆண்டு பூசை படையல் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் நாச்சியாரம்மனுக்கு சிறப்பு அபிசேக அலங்காரங்கள் செய்யப்பட்டு கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் யாக வேள்வி பூசை நடைபெற்றது. பின்பு மாலை 4 மணியளவில் ஆறுகரை குலாலர்களின் பிறந்தபிள்ளைகள் சார்பில் மாவிளக்கு வழிப்பாடு பூஜை நடைபெற்றது. பூஜையை தொடர்ந்து 5.30 மணியளவில் அனைத்து விதமான அபிசேக தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது. இதில் விழாக் குழுத்தலைவர் மெய்யர் மற்றும் ஆறுகரை தலைவர்கள் ராமசாமி, மாணிக்கம், சண்முகம், ராமசாமி, துரைச்சாமி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இதில் சுற்று வட்டார பகுதி ஆறு கரை ஊர்களான இளையாத்தங்குடி, நெய்வாசல், ஆத்தங்குடி, காரையூர், ராஜக்கம்பட்டி, சுண்ணாம்பிருப்பு ஆகிய தாய் கிராமங்களின் குலாலர்கள் விழாவில் கலந்துகொண்டு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதமும் பெற்று சென்றனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா