×

விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும் குரங்குகள்

சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை அருகே, விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும் குரங்குகள், மான், மயில் ஆகியவற்றை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
சிவகங்கை அருகே சென்னலக்குடி, கவுரிப்பட்டி, முத்தூர்வாணியங்குடி, மேலக்காடு, சாலூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப் பகுதிகளில் வாழை, கரும்பு, நெல், கடலை மற்றும் காய்கறிகள், கொய்யா, பலா, தென்னை உள்ளிட்ட தோட்டங்கள் உள்ளன. இப்பகுதி வயல்களில் கடந்த சில ஆண்டுகளாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் மரங்களில் உள்ள காய்கள், இளநீர் உள்ளிட்டவற்றை காய்க்க தொடங்கும் காலத்திலேயே அழித்து விடுகிறது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள கரும்புகள், நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. வாழை மரங்களையும் ஒடித்து விடுகின்றன. குரங்குகளை விரட்ட வானவெடிகள் வைத்தும் அவைகள் செல்லாமல் இப்பகுதியிலேயே உள்ளன. குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்காததால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் தற்போது விவசாயம் செய்வதையே குறைத்து வருகின்றனர்.
காய்கறிகளை நாசம் செய்யும் மான்கள்:இதுபோல் காடுகளில் இருந்து கிராமத்தில் உள்ள ஊருணியில் நீர் அருந்த வரும் மான்கள் விவசாய நிலங்களில் உள்ள காய்கறிகள், பயிர்களை சேதப்படுத்துகிறது. இரவு நேரங்களில் கூட்டமாக வந்து பயிர்களை நாசப்படுத்தி செல்கிறது. இப்பகுதியில் மயில்களும் அதிகம். இவைகளும் நெல், கேழ்வரகு போன்ற தானியப்பயிர்களை கூட்டமாக அழிக்கிறது. இவைகளிடம் இருந்து பயிர்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை காக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது, ‘மழை இல்லாமல் அதிக செலவு செய்து கிணற்று நீரை பயன்படுத்தி பெரும் சிரமங்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில் குரங்கு, மான், மயில்களால் ஏற்படும் பாதிப்பால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. மான்கள் வாழும் காட்டுப்பகுதிக்குள் போதிய குடிநீர் தொட்டிகள் கட்ட வேண்டும்’ என்றனர்.
குழப்பமான உறுதிமொழிமுன்னதாக பழைய பாசன சங்க விவசாயிகளிடம், தாசில்தார் பாலகுரு கூறியபடி தேர்தல் நடைபெறுமா, இல்லை புதிய பாசன சங்க விவசாயிகளிடம் கூறியபடி சமாதான கூட்டத்தில் தீர்வாகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...