×

பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணி நிறைவு

ஊட்டி,  ஜூலை 23:  ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் சீரமைப்பு  பணிகள் முடிந்த நிலையில், முழுமையாக பயன்படுத்த சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டது.   கோடை சீசனில் தாவரவியல் பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும்  சேதம் அடைகின்றன. குறிப்பாக, பெரிய புல் மைதானத்திற்குள் அனைத்து சுற்றுலா  பயணிகளும் குவியும் நிலையில், அங்குள்ள புற்கள் அனைத்தும் சேதம் அடைகிறது.மேலும், மழை பெய்யும் போது சுற்றுலா பயணிகள் இந்த புல்  மைதானங்களில் ஓடி ஆடி விளையாடுவதால் புற்கள் சேதமாகின்றன.   இந்நிலையில்,  பெரிய புல் மைதானம் மற்றும் சிறிய புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் கடந்த  ஒன்றரை மாதமாக நடந்து வந்தது. இதனால், சிறிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா  பயணிகள் செல்ல தற்போது வரை தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது பெரிய  புல் மைதானம் சீரமைக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் செல்ல  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள்  அனைவரும் தற்போது பச்சை பசேல் என காட்சியளிக்கும் பெரிய புல் மைதானத்தில்  ஓடி ஆடி விளையாடுகின்றனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு